சிரியா நாட்டில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சி தொடர்ந்து நீடிப்பதால் அங்குள்ள தூதரகத்தை மூட துருக்கி முடிவு செய்தது. இதற்கான உத்தரவை வெளியுறவுத்துறை நேற்று அறிவித்தது. இதனை அடுத்து டமாஸ்கசில் உள்ள துருக்கி நாட்டு தூதரகத்தை மூடி விட்டு அதிகாரிகள் வெளியேறுகிறார்கள்.
மேலும் சிரியாவில் எல்லையோரப்பகுதிகளில் வசிக்கும் துருக்கி மக்கள் உடனே நாடு திரும்பும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.