"தீபன் பக்கங்கள்"
மரம வளர்ப்போம் நன்மை பெறுவோம்
மரங்களுக்கான எனது கூக்குரல்கள்....
ஒரு நண்பனை இழக்க 100 முறை யோசி
ஒரு மரத்தை இழக்க 1000 முறை யோசி
ஒரே நேரத்தில் மனித குலம் முழுமைக்கும் உதவ
ஆசைப்படுகிறாயா...? ஒரே ஒரு மரத்தை நட்டு வை !!!!
மரங்கள் , ஆக்சிஜன் அம்மாக்கள்.. !
இறைவனை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்..
மரங்கள் தலையாட்டி ரசிக்கின்றன
இருப்பு ....இல்லாததில் தேடுவதுதானே...??
வானத்திற்கும் ,பூமிக்குமான ஒரே தொலைத்தொடர்பு
மரங்கள் மட்டுமே... இந்த டவர்களையெல்லாம்
வெட்டிவிட்டுவிட்டு... மழைச்சிக்னல் கிடைக்கவில்லை
யென்று ஏன் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்..?
குழந்தையில்லாத வீடு பாழ்...
மரமில்லாத ஊர் பாழ்
வனமில்லாத நாடு பாழ்...
மழையில்லாமல் மொத்தமும் பாழ்.. !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


0 comments:
கருத்துரையிடுக