"தீபன் பக்கங்கள்"

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ஆம் அது தான் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில். இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, “விஷ்ணு” கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே ” பெரியது

மரம வளர்ப்போம் நன்மை பெறுவோம்

மரங்களுக்கான எனது கூக்குரல்கள்.... ஒரு நண்பனை இழக்க 100 முறை யோசி ஒரு மரத்தை இழக்க 1000 முறை யோசி ஒரே நேரத்தில் மனித குலம் முழுமைக்கும் உதவ ஆசைப்படுகிறாயா...? ஒரே ஒரு மரத்தை நட்டு வை !!!! மரங்கள் , ஆக்சிஜன் அம்மாக்கள்.. ! இறைவனை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.. மரங்கள் தலையாட்டி ரசிக்கின்றன இருப்பு ....இல்லாததில் தேடுவதுதானே...?? வானத்திற்கும் ,பூமிக்குமான ஒரே தொலைத்தொடர்பு மரங்கள் மட்டுமே... இந்த டவர்களையெல்லாம் வெட்டிவிட்டுவிட்டு... மழைச்சிக்னல் கிடைக்கவில்லை யென்று ஏன் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்..? குழந்தையில்லாத வீடு பாழ்... மரமில்லாத ஊர் பாழ் வனமில்லாத நாடு பாழ்... மழையில்லாமல் மொத்தமும் பாழ்.. !

நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...!

நான் எழுதும் கவிதை நிச்சயம் உனக்கு புரியாது.. என் மனக்கண்ணாடியை நீ அணிந்து பார்த்தாலும் உனக்கு தெரியாது.. என் மனக்காட்சிகள் எனக்கே சரியாக தெரியாத நிலையில் அதை படம் பிடித்து கவிதையாய் படைக்கையில் உனக்கு மட்டும் தெரியுமா? எனது கவிதை புரியுமா? உனக்கு என் கவிதை புரியாததால் நான் வருத்தப்பட முடியாது... என் வருத்தங்களை கவிதையாய் படைக்கையில் அதுவும் பிறர்க்கு புரியவில்லையென அதற்கும் வருத்தப்பட மாட்டேன்.. என் சிந்தையில் சிந்தியவைகளை எழுத்துக்களாய் கோர்த்து நினைவுகளை வார்த்து உணர்ச்சிகளை சேர்த்து கவிதை தூரலாய் தூவுகிறேன்.. அந்த தூறலில் நனைவது உனக்கு பிடிக்கவில்லை என்பதால் எனது கவிதை தூறல் நின்று விடாது.. என்ன செய்வது, உடையும் நிலையில் இருக்கும் அணையின் மீது பெய்யும் கார்கால மேகமாக சில நேரம் எனது கவிதை... மீண்டும் சொல்கிறேன் நான் எழுதும் கவிதை நிச்சயம் உனக்கு புரியாது ..

இது கவிதை நேரம்

தாயின் துடிப்பு

உனக்காய் துடித்த ஓர் இதயம் உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம் ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம் அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம் நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம் செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம் இன்று துடிக்கிறது! இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்! என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?

வாரா வாரம் எமக்கு காமெடி வாரம்தான்

ஒருவன்- ஒரு ஜவுளிக் கடையில்.. "டேய் மொக்கை.. இந்த சட்டையைப் பார்த்தியா..? 2000 ரூபாயாம்.. சரியான கொள்ளைக்காரப் பசங்க.." மற்றவன்- "சரி.. சரி.. பேசுனது போதும்.. சீக்கிரம் மூட்டையைக் கட்டு.. விடியப் போகுது..!" **தீபன்**

சேவற்கொடி - Sevarkodi திரைப்பட விமர்சனம்

தமிழ்த் திரையுலகத்திற்கு மீண்டும் ஒரு நம்பிக்கையூட்டும் வரவு. சுப்பிரமணியன் இளம் இயக்குநர். ராதாமோகனிடம் பணியாற்றியவர். 'அபியும் நானும்' படத்திற்கு வசனம் எழுதிய இரட்டையர்களில் ஒருவர்..! ராதா மோகன் டீம் என்பதால் வசனத்திற்கும், காட்சிப்படுத்தலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார்..! படத்தின் மிகப் பெரும் பலமே கன்னியாகுமரி வட்டார தமிழ்தான்..!

கழுகு - Kazhugu திரைப்பட விமர்சனம்

மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் பிணங்களை மீட்கும், நான்கு பேரின் வாழ்க்கையை பற்றிய கதை. ஹனிமூன் கொண்டாட மூணாறு செல்பவர்கள் உண்டு. இன்பச் சுற்றுலா செல்பவர்களும் உண்டு.. கணவரைக் கொலை செய்ய மனைவிகளும், மனைவியைக் கொலை செய்ய கணவன்களும், மனைவியின் கள்ளக் காதலனை கொலை செய்ய கணவர்மார்களும், கணவரின் கள்ளக்காதலியை கொலை செய்ய மனைவிமார்களும் மூணாறுக்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு..

இலங்கையில் வலுவாக கால்ஊன்ற முயற்சிகிறதா சீனா?

மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா.சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றதால் இலங்கை கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. குறிப்பாக தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்ததால் இந்தியா மீது சிங்கள தலைவர்கள் அதிருப்தியுடன் உள்ளனர். இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்ததால் எதிர் காலத்தில் இந்தியா-இலங்கை இடையிலான உறவு பாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்தியாவுடனான உறவில் மாற்றம் இல்லை என்று சிங்கள மந்திரி லட்சுமன்யாபா அபேவர்தன கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவுடன் எமக்குள்ள நட்பு நீடிக்கும். அதை ஒருபோதும் முறித்துக் கொள்ள மாட்டோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு கெடும் வகையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றார். இலங்கை வடகிழக்கு பகுதியில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. அந்த பணிகள் நீடிக்குமா? என்று கேட்டதற்கு லட்சுமன்யாபா கூறுகையில், இந்தியாவின் அபிவிருத்தி பணிகள் இடையில் நிறுத்தப்பட மாட்டாது. அமெரிக்காவுடனும் நாங்கள் முரண்பாடான நிலையை எடுக்க மாட்டோம் என்றார். இதற்கிடையே சிங்கள பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது. அதில் பேசிய பிரதமர் ஜெயரத்னே, ஐ.நா.சபையில் தங்களை ஆதரித்த 15 நாடுகளுக்கும் நன்றியை தெரிவித்தார். ஐ.நா.சபையில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து மகிந்த ராஜபக்சேயின் தம்பியும் மந்திரியுமான பசில்ராஜ பக்சே கூறுகையில், சர்வதேச அளவில் இலங்கை மீது அடிக்கடி இப்படி நெருக்கடி வருகிறது. அதை அரசு வெற்றிகரமாக எதிர்நோக்கியுள்ளது என்றார். அவர் மேலும் கூறுகையில், வலுவான நாடுகள் கொடுக்கும் நெருக்கடிகளால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இந்த நெருக்கடிகளை எங்களால் முறியடிக்க முடியும் என்றார். ஐ.நா.சபையில் வந்த தீர்மானம் விஷயத்தில் இலங்கையை விட சீனாதான் தீவிரமாக இருந்தது. தீர்மானத்தை தோற்கடிக்க சீனா மட்டுமே வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்தது. இலங்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வந்து விடும் திட்டத்துடன் சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் தீர்மானம் வெற்றி பெற்றதும் சீனா அதிர்ச்சி அடைந்தது. என்றாலும் இந்தியாவின் நிலைப்பாட்டை சொல்லி, இலங்கையில் சீனா வலுவாக கால்ஊன்ற முயற்சிகள் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பபுவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்



6.7-magnitude earthquake jolts Papua New Guinea - World News Headlines in Tamil
இந்தோனேசியா அருகேயுள்ள பபுவா நியூ கினியா நாட்டில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.7 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் துறையினர் அறிவித்தனர்.
இந்த நில அதிர்வு தலைநகரில் இருந்து 384 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோராகா நகர் பகுதியில் 106 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதனால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. என்றாலும் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

திபெத் மலைப்பகுதியில் சீனா போர் ஒத்திகை



China test its J-10 fighters near borders with India - World News Headlines in Tamil
இந்தியா எல்லையை ஒட்டியுள்ள திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப்படையினர் குண்டுகளை வீசி போர் ஒத்திகை நடத்தி வருகிறார்கள்.
இந்த ஒத்திகையில் சீனாவின் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. திபெத்தில் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த ஒத்திகை நடைபெறுவதாகவும், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின் போது லேசர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கில் வீசி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல் கூறுகிறது.
இந்த ரக போர் விமானங்கள் உயரமான மலைப்பகுதியில்(ஆக்சிஷன் குறைவாக இருக்கும் இடம்) சென்று குண்டு வீசும் திறம் படைத்தது என்று கூறப்படுகிறது.

ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்தது குறித்து இந்தியா விளக்கம்



Why India voted against Sri Lanka at UNHRC? explained - India News Headlines in Tamil
ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட்டது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கை அரசு நியமித்த 'கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின்' (எல்.எல்.ஆர்.சி.) சிபாரிசுகளை நாங்கள் ஏற்கனவே வரவேற்றுள்ளோம். இலங்கையின் பல்வேறு மதரீதியான, இனரீதியான குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண இது நல்ல வாய்ப்பு என்று நாங்கள் கருதுகிறோம்.
கடந்த 2009-ம் ஆண்டு இதே குழு கூட்டத்தில் இலங்கை, இதை செய்வதாக உறுதி அளித்தது. தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்று நாங்களும் வலியுறுத்தினோம்.
இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை எல்.எல்.ஆர்.சி. ஆணையம் அங்கீகரித்துள்ளது. போரின்போது காணாமல்போன நபர்கள், சிறை வைக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், உயர் பாதுகாப்பு மண்டலங்களை குறைத்தல், சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் செயல்பாடுகளை தடை செய்தல், தனியார் நிலங்களை திரும்ப ஒப்படைத்தல், ராணுவமயமாக்கலை குறைத்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எல்.எல்.ஆர்.சி. ஆணையம் உறுதியான சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.
இந்த சிபாரிசுகளை அமல்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்த குழு கூட்டத்தில் இலங்கை அரசு விளக்கிக் கூறியுள்ளது. இந்த அறிக்கையை அமல்படுத்துவது, உண்மையான நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியாவும், வடக்கு இலங்கையில் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு கணிசமான உதவிகளை செய்துள்ளது. வீடு கட்டிக் கொடுத்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், கல்வி, பொது சுகாதாரம், தொலைத்தொடர்பு வசதி ஆகியவற்றை நாங்கள் அளித்துள்ளதால், அங்கு இயல்பு நிலைமை திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், இலங்கை அரசு விரிவான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தை அமல்படுத்துதல், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மனித உரிமை மீறல் விஷயத்தில், சம்பந்தப்பட்ட நபர்களை பொறுப்பாளி ஆக்குவதுடன், மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள், இலங்கையின் சிறுபான்மை இனமாகிய தமிழர்கள் உள்பட அனைத்து இன மக்களிடையே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும்.
மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய, மேம்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு, நாடுகளுக்கு இருக்கிறது என்று இந்தியா நம்புகிறது. எனவே, இதுதொடர்பான தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் (இலங்கை) இறையாண்மை உரிமையை மதிப்பதாக இருக்க வேண்டும். மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும்.
ஐ.நா. மனித உரிமை குழுவில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தின் செய்தியையும், நோக்கத்தையும் இந்தியா ஆதரிக்கிறது. அதே சமயத்தில், ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியும், இலங்கை அரசுடன் கலந்தாலோசனை நடத்தி, அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதெல்லாம், ஐ.நா. மனித உரிமை குழுவில் நாம் ஒப்புக்கொண்ட விதிமுறைகள்.
நல்லிணக்கத்தையும், அமைதியையும் நிலைநாட்டுவதில் ஜனநாயக நாடான இலங்கைக்கு போதிய காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும். நாம் எடுக்கும் முடிவுகள், இந்த நோக்கத்துக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, இடைனிறாக இருக்கக் கூடாது.
அண்டை நாடான இலங்கையுடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கலாச்சார மற்றும் ஆன்மிக உறவு, இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த நிலையில், இலங்கை நிகழ்வுகளில் இருந்து நாங்கள் ஒதுங்கி இருக்க முடியாது.
இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவம், கண்ணியம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றுடன் கூடிய எதிர்காலம் அமைவதற்காக, நல்லிணக்க நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 
ரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்துடன் சுவிஸ் வங்கியில் பணத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும்


சுமார் 2,000 பேரின் பெயர்கள் அம்பலமாக... அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பதுங்கியிருக்கும் கறுப்புப்பண முதலைகள் கலங்கிப் போய்க் கிடக்கிறார்கள்!

''எலி வால் என்று நினைத்துத்தான் முதலில் இழுக்க ஆரம்பித்தேன். இழுத்த பிறகுதான் இது எலி இல்லை, பல தலைகளைக் கொண்ட பயங்கர அரக்கன் என்று தெரிந்தது...'' என்று சொல்லும் 55 வயது ருடால்ஃப் எல்மர், கடந்த 17-ம் தேதி லண்டன் மாநகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கிறவர்களின் தகவல்கள் அடங்கிய இரண்டு சி.டி-யை 'விக்கி லீக்ஸ்' இணையதளத்தின் ஜூலியன் அசாஞ்சே வசம் கொடுத்தவர் இவர். ''இந்தக்கறுப்புப் பண முதலைகளின் பெயர்களையும் அவர்கள் பெயரில் எத்தனை கோடி ரூபாய் 'ஜூலியஸ் பே(ய)ர்’ என்ற சுவிஸ் வங்கியில் இருக்கிறது என்ற உண்மைகளையும் உங்கள் இணைய தளத்தில் வெளியிடுங்கள்!'' என்று சொல்லி இருக்கிறார்.
இது அப்படியே தொலைக்காட்சியிலும் வெளியாக... உலகம் முழுவதும் உள்ள கறுப்புப் பண பெருச்சாளிகள் வெலவெலத்துக் கிடக்கின்றன!
'ருடால்ஃப் எல்மர் ஒரு பைத்தியம்... உளறிக் கொட்டுகிறார்’ என்று வசைபாடும் ஜூலியஸ் பே(ய)ர் வங்கியின் அதிகாரிகள்கூட உள்ளுக்குள் உதறலோடுதான் இருக்கிறார்கள். காரணம், எல்மர் யாரோ ஒரு வழிப்போக்கர் இல்லை. அந்த வங்கியில் பல ஆண்டு காலம் வேலை பார்த்தவர். இந்த வங்கியின் உள்குத்து, கபட வேலைகள் எல்லாம் நன்றாகத் தெரிந்தவர். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வங்கியின் கேமெண்ட் தீவு கிளையில் இவர் வேலை பார்த்தபோது, ''பிரைவஸி என்ற பெயரில், 'ஊர் சொத்தைக் கொள்ளையடித்து உலையில் போடுவது மாதிரி’ இந்த வங்கியில் பலர் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள்!'' என்று தன் மேல் அதிகாரிகளுக்குச் சொன்​னாராம். அப்போதே அந்த வங்கி இவருக்குப் பைத்தியக்காரப் பட்டம் கட்டி, கல்தா கொடுத்தது. இருந்தாலும் தன் கையில் இருக்கும் தகவல்களை எடுத்துக்கொண்டு அவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வருமானவரித் துறைகளின் கதவுகளை மூன்று ஆண்டு காலம் இடைவிடாமல் தட்டிவந்தார்.
'எல்மரைக் கைது செய்தால் பேச்சு சுதந்திரத்துக்கு வேட்டு வைக்கிறோம் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடுமோ?’ என்று அஞ்சிய சுவிஸ் அரசாங்கம், வேறு வழியில்லாமல் கடைசியில் 'வங்கியின் ரகசி​யத்தை மீறுகிறார் இவர்’ என்று ஒரு காரணம் காட்டி ஒரு மாத காலம் சிறையில் அடைக்கவும் செய்தது. ஆனால், எல்மர் அதன் பின்பும் ஓயவில்லை! பணத்தைக் கொடுத்து அவர் வாயைக் கட்டவும் வங்கி தரப்பு முயற்சித்ததாம். ஆனால், மனுஷர் அசைந்து கொடுக்கவில்லை.  வருமான வரி அதிகாரிகள், பத்திரிகைகள், பல்கலைக்கழகங்கள் என்று தன் கையில் இருக்கும் ஆதாரங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தார்.
ஆனால், சுவிஸ் நாட்டில் உள்ளவர்கள் எல்மரைப் பொருட்படுத்தவில்லை. அதனால் கடைசியாகத்தான் அவர் விக்கி லீக்ஸ் இணைய​தளத்தை அணுகினார். ஜூலியன் அசாஞ்சேவுடன் சேர்ந்து அவர் நிருபர்களை சந்தித்த இரண்டே நாளில், 'வங்கி ரகசியத்தை வெளியிட்டார்’ என்று அவருக்கு சில லட்சங்கள் அபராதம் விதித்தனர்.

எல்மர் கொடுத்த சி.டி-யில் இருக்கும் தகவல்களை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று வெளியிட்டால் பிரச்னை வரும் என்பதால், அதை அலசி ஆராய விக்கி லீக்ஸ் தற்போது சற்று அவகாசம் எடுத்து வருகிறது. மேலும் ஊழல், லஞ்சம், கையாடல் என்று பல விஷயங்களில் முதலிடத்தில் இருக்கும் இந்தியர்களின் பெயர்களும் இந்த சி.டி-யில் நிறையவே இருக்கிறது! இந்தியத் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் பெயர்களாம் அவை!
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிவைத்து இருக்கும் இந்தியர்களின் விவரங்களை இப்போது இந்திய சேனலுக்குக் கொடுத்துள்ளார் எல்மர். ''அன்னபூரணா என்ற பெயருடன் ஆரம்பிக்கும் மூன்று கம்பெனிகளின் பெயர்களில் முறையே  259,  84 மற்றும்  45 கோடிகளை ஜூலியஸ் பெர் வங்கியின் நியூயார்க் கிளை மூலம் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது!'' என்ற முதல்கட்ட தகவலையும் அந்த கம்பெனிகளின் கணக்கு விவரங்களையும் எல்மர் தந்துள்ளாராம்.
அதேபோல, ''அஷத் அலி கான் என்ற ஒரு இந்தியர், மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான கேமெண்ட் தீவுகளில் இருக்கும் ஜூலியஸ் பே(ய)ர் கிளையில் பெரும் பணத்தைப் பதுக்கியுள்ளார். ஆனால், இங்கே நான் குறிப்பிடும் அன்னபூரணாவும் சரி, அஷத் அலியும் சரி... இந்தப் பணத்துக்கு முழு சொந்தக்காரர்கள் என்று சொல்ல முடியாது. இவர்கள் வேறு யாருடைய பினாமியாகவும் இருக்கலாம். மேலும் இந்தியாவில் இருக்கும் கறுப்புப் பண முதலைகளின் பணத்தை தன் வங்கிக்கு டெபாசிட்டாகக் கொண்டு செல்ல, இந்தியாவில் ஒரு தனி அதிகாரியையே - புரோக்கர் போல - இந்த வங்கி நியமித்து இருந்தது...'' என்றும் எல்மர் சொல்லி இருக்கிறாராம்.
இந்த கலாட்டாவுக்கு நடுவில், லீஷ் என்ஸ்டைன் என்ற ஐரோப்பா குட்டி நாட்டு வங்கியில் பணம் போட்டுவைத்து இருக்கும் 26 இந்தியர்​களின் பெயர்கள் அடங்கிய ஒரு கவரை இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது! அது எப்போது பிரிக்கப்படும்? உண்மை எப்போது வெளியே வரும்?
ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது​தான்!

கார்ட்டூன்:வரான் வரான் 'பூ'ச்சாண்டி!?

கார்ட்டூன்:வரான் வரான் 'பூ'ச்சாண்டி!?

மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா?

மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா?: மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம் . கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி ...

Facebook உங்களுக்காக

Facebook

Google

Google

ஒரிஜினல் விண்டோஸ் 7 இலவசமாக..


நாம் பயன்படுத்தும் விண்டோஸ் pirated ஆக இருந்தால் அதற்கான அப்டேட் file கள் கிடைக்காது. மேலும் இணையத்தில் இணைந்திருந்தால் இந்த விண்டோஸ் பதிப்பு திருடப்பட்டதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை கிடைக்கும். இதோ அதற்கான தீர்வு... ஒரிஜினல் விண்டோஸ் 7 ultimate (மிக உயர்ந்த விண்டோஸ் பதிப்பு ) போன்ற pirated விண்டோஸ் 7 ultimate. இதனை cdயில் காபி செய்து பூட் செய்தபின் அதே cdயில் உள்ள அக்டிவேடர் இணை இயக்கினால் விண்டோஸ் activate செய்யப்படும். இபோது நீங்கள் இணையத்தில் உள்ளவினாலும் உங்கள் பதிப்பு pirated என்று கண்டு பிடிக்க இயலாது... மேலும் நீங்கள் அனைத்து விண்டோஸ் updateகளையும் பெறலாம்... மேலும் விண்டோஸ் செக்யூரிட்டி essentials ஆண்டி வைரஸ் தொகுப்பினையும் பெறலாம்....

அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு


குழந்தைகள் அடிக்கடி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதல் கார்டூன் அனிமேசன் பிலிம் வரை அத்தனையையும் ஒரே இடத்தில் இருந்து நமக்கு காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.
குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தளத்தை உருவாக்கி அதில் குழந்தைகள் விரும்பும் அத்தனை நிகழ்ச்சிகளையும் வீடியோவில் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Funniest Videos, Movies, Silly Songs, New Music, Amazing Animals, TV & Cartoons போன்ற அத்தனை நிகழ்ச்சிகளையும் இத்தளத்தில் இருந்து இருந்து பார்க்கலாம்.
ஒவ்வொரு பிரிவிலும் பல தரப்பட்ட வீடியோக்கள் நம் பார்வைக்கு கிடைக்கிறது. குழந்தைகள் அதிகமாக விரும்பும் வீடியோக்களை வரிசைப்படுத்தி தனித்தனியாக கொடுத்திருப்பதால் குழந்தைகளுக்கு இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை. நாம் பார்க்கும் வீடியோக்களை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

தொப்பையை கரைத்து இளமையை மீட்க உதவும் யோக முத்திரா : யோகப் பயிற்சி 11

ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு


யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன.  நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது. 

குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது தமிழ்வாக்கு. அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச்சிக்கலையும் நீக்குவதால் யோக முத்திரா ஆசனங்களில் முத்திரை பதிக்கிறது. இந்த ஆசனம் எளிமையானது.
 
செய்முறை:

பத்மாசனத்தில் அமரவும். இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதிங்கால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக் கொள்ளவும். நிமிர்ந்து நேரே உட்காரவும். நுரைஈரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும். இப்போது மூச்சை விட்டுக் கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும். இப்படி இருக்கும் போது மூச்சை சௌகரியப்படி விடவும் வாங்கவும் செய்யவும். மூச்சை அடக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவர்க்கு வேண்டியபடி மூன்று முதல் 7 தடவைகள் வரை செய்யலாம்.
இந்த ஆசனம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும் செய்வதற்கு அவ்வளவு எளிதாக வந்து விடாது. சிலருக்கு என்ன செய்தாலும் மிகவும் அடிப்படையான ஆசனமான பத்மாசனம் போடவே வராது. அவர்கள் பத்மாசனம் நன்றாக செய்ய வரும் வரை, சாதாரணமாக அமரும் முறையில் சுகாசனத்தில் உட்கார்ந்து, இரண்டு முழங்கால்களுக்கு மேல் இரண்டு உள்ளங்கைகளை வைத்து அழுத்திக் கொண்டு, முன்னுக்கு குனிந்து மூக்கு தரையை தொட முயற்சிக்க வேண்டும். இரண்டு கைகளையும் பின்னுக்கு கட்டிக் கொண்டு தொடவும் முயற்சி செய்யலாம்.
அல்லது சுகாசனத்தில் இரண்டு பெருவிரல்களை கைகளால் பிடித்துக் கொண்டு முன்னுக்கு குனியவும் செய்யலாம். இவைகள் எல்லாம் பத்மாசனம் வராதவர்களுக்கு தான். ஆனால் இடையிடையில் பத்மாசனமும் போட்டு பழக வேண்டும். பிறகு முன் சொன்னது போல் பத்மாசனத்திலிருந்தே குனிய முயற்சி செய்ய வேண்டும். கைகளை குதிகாலின் மீது வைத்துக் கொண்டும் குனியலாம். கைகளை குதிகாலின் மேல் வைத்துக் கொண்டு குனிவது கடினமாக இருந்தால், பின்னுக்கு கைகளை கட்டிக் கொண்டு குனியலாம். சில நாட்களுக்கு பின் கைகளை குதிக்கால்களின் மேல் வைத்துக் குனியலாம். பத்மாசனம் போட்ட படி குனிவதால், கால்கள் ஒன்றை ஒன்று அழுத்தி முதலில் வலிக்கும். நாளடைவில் பழக்கமானால் வலி இருக்காது. சிலருக்கு முன்னுக்கு குனிந்து மூக்கைத் தரையைத் தொட முயற்சி செய்யும் போது பிருஷ்ட பாகம் தூக்கிக் கொள்ளும். அப்படி நேராமல் அழுத்தமாய் தரையில் உட்கார்ந்து பழக வேண்டும்.
சிலருக்கு தொடை பகுதி அதிக சதைகளுடன் மிகவும் பெரிதாக இருக்கும் போது அவர்கள் முன்குனிந்து தரையைத் தொட கடினமாக இருக்கும். சிலருக்கு வயிறு கொழுப்பு சேர்ந்து தொப்பை விழுந்து இருப்பதாலும் முன்குனிய முடியாது. அவர்கள் எல்லாரும் மற்ற ஆசனங்களுடன் யோக முத்திரவையும் முயற்சி செய்து வந்தால், நாளடைவில் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் உள்ள சதை, நரம்புகள் இளக்கம் பெற்று யோக முத்திரா செய்வதற்கு எளிதாகும். இந்த ஆசனம் செய்ய செய்ய தொப்பை பெருமளவு கரைந்து விடும். வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பு தான் சர்க்கரை நோய்க்கான அடிப்படை காரணம் என்று தற்போது சொல்கிறார்கள்.
இந்த வயிற்றை சுற்றிய கொழுப்பை யோக முத்திராவில் எளிதில் கரைத்து, தொப்பையை போக்கி மிகவும் இளமையுடன் காட்சியளிக்க முடியும். தொப்பை கரைவதால் மிகவும் சுறுசுறுப்பு வந்து சேரும். சிலர் ஒல்லியாய் இருப்பார்கள். இவர்களுக்கு தொப்பையும் இருக்காது. ஆனால் இவர்களுக்கும் யோக முத்திரா செய்ய சுலபமாக வராது. காரணம், இவர்களது முதுகுஎலும்பு கட்டை பாய்ந்து இருக்கும். அதாவது, குனிந்து நிமிரும் உடற்பயிற்சிகளே இல்லாத காரணத்தால் முதுகுஎலும்பு வளைய முடியாமல் கட்டை போன்று திடமாக காணப்படும். இவர்களும் தொடர்ந்து யோக முத்திராவை பயிற்சி செய்யும் போது நன்றாக வளைந்து தரையை தொட முடியும்.
யோக முத்திராவால் முதலில் மூக்கை வைத்து தரையை தொடுவதும்,பின்னர் வாயால் தரையை தொடுவதும் என்று நன்றாக பழக்கமான பிறகு அதே நிலையில் 20 எண்ணும் வரை இருக்க வேண்டும். யோக முத்திரா முழுமையான நிலையில் சாதாரணமாக மூச்சை இழுக்கவும், விடவும் செய்யலாம்.
குறிப்பு;
யோக முத்திராவை வழக்கமாய் செய்யும் பெண்கள் கர்ப்பனமானால் இரண்டு மாதங்கள் வரை தான் செய்ய முடியும். அதன்பின் கைகளை வயிற்றின் குறுக்கே வைக்காமல் 1 மாத கால அளவிற்கு செய்யலாம். இந்த காலத்திற்கு மேல் கர்ப்பமான பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. மிகவும் முக்கியமாக கர்ப்ப காலத்தில் இந்த ஆசனத்தை பழகவே கூடாது. பத்மாசனத்தில் மட்டும் உட்காரலாம்.

ஓய்வு பெறும் சிந்தனை இன்னும் ஏற்படவில்லை - சச்சின்


அண்மையில் சரவதேச ஒரு நாள் போட்டிகளில் நூறாவது சதத்தை அடித்து சாதனை படைத்த சச்சின்

டென்டுல்கர் ஒபன் என்ற சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அணி வீரர்களுடன் சேர்ந்து நின்று தேசிய கீதம் பாடும் போது இப்பவும் கூட எனக்கு மயிர்கூச்செறிகிறது.
அதே உணர்வுதான் மட்டையை எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கும்போதும் இருக்கிறது எனவும் என்னை விமர்சிப்பவர்கள் எனக்கு கிரிக்கெட் சொல்லித் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதில் 100வது சதம் எடுத்தமை தொடர்பில் அவர் குறிப்பிடும் போது

" 100 வது சதம் எடுப்பது ஏன் கடினமாக இருந்தது என்பது எனக்கே புரியவில்லை. ஒருவேளை அது தேசிய வெறியாக மாறி என்னையும் மனதளவில் பாதித்தமை காரணமாக இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார் சச்சின் டென்டுல்கர்.

ஓய்வு பெறுவதைப் பற்றி இன்னமும் சிந்திக்கவில்லை என சச்சின் டென்டுல்கர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்



இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி, தமிழகத்தில் பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், வக்கீல்கள், மாணவர்கள், அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழ மக்கள் இந்த தீர்மான வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேறிய செய்தி காட்டூத் தீ போல நேற்று மாலையில் தமிழகம் முழுவதும் பரவியது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள், மதுரை உயர்நீதிமன்ற கிளை வக்கீல்கள் திரண்டு பட்டாசுகளைக் கொளுத்தியும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
அதேபோல மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வக்கீல்கள் திரண்டு இனிப்புகளை வழங்கினர்.
அதேபோல சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மாணவர்களும் இனிப்புகளை வழங்கியும், இலங்கையைக் கண்டித்து கோஷம் எழுப்பியும், இந்திய அரசைப் பாராட்டியும் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதேபோல தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களிலும் பெரும் உற்சாகம் காணப்பட்டது.
எங்களது இத்தனை கால அவதிகளுக்கும் இப்போதுதான் வழி பிறந்துள்ளது.
இலங்கையை தண்டிக்கும் நடவடிக்கைகளில் இதுதான் முதல் படி. இதைத்தான் நாங்கள் இத்தனை காலமாக எதிர்பார்த்திருந்தோம் என்று அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிய பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

Loading