"தீபன் பக்கங்கள்"

சிரியாவுடன் தூதரக உறவை துண்டித்தது துருக்கி


7-
Turkey shuts embassy in Syria to isolate Assad - World News Headlines in Tamil
சிரியா நாட்டில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சி தொடர்ந்து நீடிப்பதால் அங்குள்ள தூதரகத்தை மூட துருக்கி முடிவு செய்தது. இதற்கான உத்தரவை வெளியுறவுத்துறை நேற்று அறிவித்தது. இதனை அடுத்து டமாஸ்கசில் உள்ள துருக்கி நாட்டு தூதரகத்தை மூடி விட்டு அதிகாரிகள் வெளியேறுகிறார்கள்.
மேலும் சிரியாவில் எல்லையோரப்பகுதிகளில் வசிக்கும் துருக்கி மக்கள் உடனே நாடு திரும்பும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.

17 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இழப்பீடு தொகை வழங்கியது அமெரிக்கா



US paid $50000 per shooting spree death: Afghans - World News Headlines in Tamil
ஆப்கானிஸ்தானில் கடந்த 11-ந் தேதியன்று அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரால் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நேற்று முன்தினம் தலா ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் (11 ஆயிரம் டாலர்) இழப்பீடு தொகையை அமெரிக்கா வழங்கியது. அதேபோன்று, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ.25 லட்சம் (50 ஆயிரம் டாலர்) வழங்கப்பட்டது.

இந்தியாவுடனான நட்புறவு அவசியமானது: இலங்கையின் இளைஞர் விவகாரத்துறை மந்திரி


ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டது. இது இலங்கைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் "அண்டை நாடான இந்தியாவின் நட்புறவு இலங்கைக்கு மிகவும் அவசியமானது" என்று இலங்கையின் இளைஞர் விவகாரத்துறை மந்திரி துல்லாஸ் அழகப்பெருமா கூறி உள்ளார். மேலும் தமிழக அரசியல்வாதிகள் கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே இலங்கைக்கு எதிரான முடிவை இந்தியா எடுத்தது என்றும் அவர் கூறினார்.

துருக்கி ராணுவ தாக்குதலில் 15 பெண் தீவிரவாதிகள் பலி



Turkish Forces Kill 15 Women Kurd Rebels - World News Headlines in Tamil
துருக்கி நாட்டின் தென்கிழக்கே ஈராக்கையொட்டிய பகுதியில் குர்திஷ் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க அங்குள்ள ரிட்லிஸ், கூடி, சிரித் ஆகிய இடங்களில் ராணுவத்தினரும், போலீசாரும் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இங்கு பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே 2 நாட்களாக கடும் சண்டை நடந்தது. ராணுவத்தினரை எதிர்த்து பெண் தீவிரவாதிகளும் சண்டையில் ஈடுபட்டனர்.
இந்த சண்டையில் 15 பெண் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தார்கள். மேலும் 6 போலீஸ் அதிகாரிகளும் உயிர் இழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு 1984-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இத்தகைய தாக்குதல்களில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு இதை தீவிரவாதிகள் முறித்துக் கொண்டு மீண்டும் தாக்குதலில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

எண்ணெய் துரப்பண பணி மேற்கொள்ள இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு



China warns India against oil exploration in South China Sea - World News Headlines in Tamil
தெற்கு சீனா கடற்பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை மேற்கொள்ளும் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, இந்தியாவுடைய வெளி விவகாரங்களில் அடிக்கடி தலையிட்டு வருகிறது. அருணாசல பிரதேச மாநிலத்தை, தங்களுக்கு உரியது என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்த பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீன அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு சீனா கடலில் வியட்னாம் நாட்டிற்கு சொந்தமான பகுதியில் எண்ணெய் துரப்பண பணி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக இந்தியா-வியட்னாம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. தற்போது, இந்தியா அந்த பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதுகுறித்து, சீன வெளியுறவுத்துறையின் ஆசிய துறைக்கான துணை இயக்குனர் ஜெனரல் சன் வெய்டாங் கூறியதாவது:-
தெற்கு சீன கடற்பகுதி பல நாடுகளுடைய எல்லை தகராறு சம்பந்தப்பட்ட சர்ச்சைக்கு உரிய ஒரு பகுதி. அந்த பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை மேற்கொள்வது இந்தியாவுக்கு நல்லது கிடையாது. இங்குள்ள விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவிடம் கூறி இருக்கிறோம்.
இந்த பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பண நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருவது மிகவும் சிக்கலான விஷயம். இந்த பிரச்சினைக்கு அமைதியான வழியில் தீர்வு ஏற்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. எனவே, சர்ச்சைகள் நீங்கி தீர்வு ஏற்படும் வரை இந்த பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டாம்.
இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிடையேயும் பொதுவான வளர்ச்சியையே நாங்கள் விரும்புகிறோம். எனவே, இங்குள்ள சர்ச்சைகளில் இந்திய அரசு தலையிடாது என்றும், இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு சன் வெய்டாங் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கட்டமைப்பு நடவடிக்கைகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்து அவர் கூறுகையில், "இந்த 2 விஷயங்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை. காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் சீனாவின் கொள்கையில் எந்த விதமான மாற்றமும் கிடையாது. அதனை இந்தியா, பாகிஸ்தான் 2 நாடுகளும் மட்டுமே தீர்த்துக்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்டு மட்டுமே சீன நிறுவனங்கள் கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை எந்த நாட்டிற்கும் எதிரானது கிடையாது. அதே சமயம், தெற்கு சீன கடற்பகுதியில் இந்தியாவின் நடவடிக்கையானது மிகவும் சிக்கலான ஒன்று. இதில் பல நாடுகள் சம்பந்தப்பட்டு உள்ளன" என்று தெரிவித்தார்.

அண்டார்டிகா கடல் நீர் வற்றிக் கொண்டிருக்கும் மர்மம்



Coldest, deepest Antarctic water 'mysteriously shrinking' - World News Headlines in Tamil
அண்டார்டிகாவின் ஆழ் கடல் நீர் மர்மமான முறையில் வற்றி வருகிறது. உலகில் உள்ள ஆழ்கடல்களில் இருந்து வெப்பத்தின் மூலம் வெளியேறும் தண்ணீர் பூமியின் மேற்பரப்பை சென்றடைந்து மேகமாக மாறி மழையாக பொழிகிறது. இதன் மூலம் பூமியின் பருவ நிலை மாற்றம் சமநிலை படுத்தப்படுகிறது.

ஆனால், பனிக்கட்டிகளால் ஆன அண்டார்டிகா கடலின் தென் பகுதியில் உள்ள ஆழ்கடல் நீர் வற்றி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் வினாடிக்கு 8 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வற்றி மாயமானதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றின் தண்ணீரை விட 50 மடங்குகளாகும். இந்த கடல் நீர் வற்றுவதற்கான காரணம் மர்மமாக உள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

உலகிலேயே மிகவும் குளிர்ந்த நீரைக் கொண்டுள்ள கடல் அண்டார்டிக்கா கடல் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடலின் நீர் வற்றிப் போவதற்கு அதிகரிக்கும் புவி வெப்பமும், ஓசோனில் விழுந்த ஓட்டையும்தான் காரணம் என புவி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்குமா அமெரிக்கா?



US gives waiver to Sri Lanka to continue importing Iran's oil - World News Headlines in Tamil
அணு ஆயுத பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எரிபொருள் இறக்குமதி செய்யக்கூடாது என உலக நாடுகளை எச்சரித்துள்ளது. இருந்தும் இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தைவான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் கச்சா எண்னை மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்து வருகின்றன.

எனவே இந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன் நடவடிக்கையாக இலங்கை மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த நிர்பந்தத்தை சீனா வன்மையாக கண்டித்துள்ளது.

ஐ.நா. சபை தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை மந்திரி ஜி.எல்.பெரீஸ்



Sri Lanka says it will not abide by UNHRC resolution - World News Headlines in Tamil
ஐ.நா. மனித உரிமை குழு தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம் என்று, இலங்கை வெளியுறவு துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ் அறிவித்தார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறலை கண்டித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் குழு கூட்டத்தில் இந்தியா ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்து உள்ளது. கொழும்பு நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பீரீஸ், "இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்துக்கு கட்டுப்படுவது இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை" என்று தெரிவித்தார்.
"இந்த தீர்மானம் இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாக நாங்கள் கருதுகிறோம். மேலும் இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க முடியாது. இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் அல்ல" என்றும், அவர் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில், "தீர்மானத்தின் அனைத்து சிபாரிசுகளையும் அமல்படுத்த நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் ஏற்றுக்கொள்ளும், நடைமுறைக்கு சாத்தியமான சிபாரிசுகளை மட்டுமே அமல்படுத்துவோம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ நாங்கள் பதில் அளிக்க வேண்டியது இல்லை" என்று, இலங்கையின் மற்றொரு மந்திரியான நிர்மல் ஸ்ரீபல்ல டிசில்வா தெரிவித்தார்.
தங்கள் நாடு அமைத்த "போரினால் பெற்ற படிப்பினை மற்றும் சமரச நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை தொடர்ந்து அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தது குறித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங், அதிபர் ராஜபக்சேவுக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார். அது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவு துறை மந்திரி பெரீஸ், பிரதமர் மன்மோகன்சிங் கடிதத்துக்கு பதில் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிர்ச்சியில் பெண் பலி



Strong quake shakes Chile - World News Headlines in Tamil
சிலி நாட்டின் மத்திய பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் துறையினர் அறிவித்தனர்.
அங்குள்ள டால்கா நகருக்கு 27 கிலோ மீட்டர் தென்மேற்கு 35 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த அதிர்வினால் பெரிய அளவில் பொருட்கள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
என்றாலும் தலைநகர் சான்டியாகோ மற்றும் நாட்டின் மத்திய பகுகளில் இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் இருந்த டி.வி. பெட்டிகள், சமையல் அறை பாத்திரங்கள் போன்றவை கடகடவென ஆடின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தினால் கடலோரப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். சுனாமி ஆபத்து இல்லை என தெரிய வந்த பின்னர் இவர்கள் வீடு திரும்பினர். தென்மத்திய பகுதியில் இருக்கும் பார்ரால் நகரில் வசித்த 74 வயது பெண் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதை அந்த நகர மேயர் தெரிவித்தார்.
இந்த சிலி நாட்டின் மத்திய பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு 8.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுதக் குறைப்பில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட உள்ளோம்: அதிபர் ஒபாமா


Obama vows to pursue nuclear cuts with Russia - World News Headlines in Tamil
எங்களிடம் தேவைக்கு அதிகமாகவே அணு ஆயுதங்கள் உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தென்கொரிய தலைநகர் சியோலில், அணுசக்தி பாதுகாப்பு மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாடு துவங்குவதற்கு முன்னதாக அதிபர் ஒபாமா கூறியதாவது: எங்களிடம் தேவைக்கு அதிகமாகவே அணு ஆயுதங்கள் உள்ளன. 1,500 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அணுகுண்டு பொருத்தப்பட்ட 5 ஆயிரம் ஏவுகணைகள் உள்ளன. எனவே, தான், அணு ஆயுதங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இந்த விஷயத்தில், ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட உள்ளோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இது தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலன் அளித்து வருகின்றன. அணு ஆயுதம் தயாரிப்பதற்குரிய பொருட்கள் தேவையான அளவில் கிடைக்கின்றன. இவை பாதுகாப்பற்ற நிலையில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பெற்று அணுகுண்டு தயாரிக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றனர். அணு குண்டுகள், பயங்கரவாதிகளின் கையில் சிக்கி விடுமோ என்ற அச்சுறுத்தல் தான், உலகத்தை ஆட்டிப் படைக்கிறது. மேலும், அணுஆயுத தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள் பாதுகாப்பற்ற முறையில் சில இடங்களில் உள்ளன என்பதும் எங்களுக்கு தெரியும். எனினும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் எந்த வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் தன்மை படைத்திருப்பதால், அணு ஆயுதங்களை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அந்த எண்ணத்தில் இங்கே 53 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் அணு ஆயுதக் குறைப்பு பற்றி வலியுறுத்தப்படும். இவ்வாறு ஒபாமா கூறினார்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங்கை, ஒபாமா கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
சியோல் மாநாட்டில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி குறிப்பிடுகையில், "வடகொரியாவின் அணு சக்தி திட்டத்திற்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த காலங்களில் இது போன்ற தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது முடிந்து போன விவகாரம். அணுசக்தி பொருட்களால் ஏற்படும் பேரழிவைத் தடுப்பதற்குரிய உபாயங்களை உலகம் கண்டறிய வேண்டும்" என்றார்.
வடகொரியா பல்வேறு நவீன ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில் அணுகுண்டை சுமந்து செல்ல வல்ல ராக்கெட்டை சோதனை செய்து வருகிறது. இந்த ராக்கெட் சோதனை தென்கொரியாவின் எல்லைப்புற ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கக்கூடாது. மீறினால் அந்த ராக்கெட்டை சுட்டு வீழ்த்துவோம் என, தென் கொரிய ராணுவ அதிகாரி யூன் வோன் னிக் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்திற்குள் 12 நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு



12 countries may face US sanctions over oil purchase from Iran - World News Headlines in Tamil
ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதாக தெரியவந்துள்ள 12 நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு சோதனை நடத்துவதாக ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் புகார் தெரிவித்து வருகின்றன. இதனால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானிமிடருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் மீது வரும் ஜூன் மாதத்திற்குள் பொருளாதார தடை விதிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் முடிவு செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் அறிவிப்பு வெளியிடுவார். இவ்வாறு விக்டோரியா நியூலன்ட் கூறினார்.

அமெரிக்காவுடன் சீனா இணைந்து செயல்பட வேண்டும்: சீன அதிபரிடம் ஒபாமா வலியுறுத்தல்




Obama urges China's Hu to help curb North Korea nuclear plans - World News Headlines in Tamil
வடகொரியா, ஈரான் நாடுகள் அணு ஆயுதம் தயாரிப்பு விவகாரத்தில் அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபரிடம் ஒபாமா வலியுறுத்தினார்.
தென்கொரியாவில் உள்ள சியோலில் அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க 50 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் குவிந்துள்ளார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, சீன அதிபர் ஹூ ஜின்டாவோ ஆகியோர் சியோல் சென்று இருக்கிறார்கள். இந்த இரு தலைவர்களும் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் அணு ஆயுதம் தயாரிப்பதில் ஈடுபடும் விவகாரம் குறித்து விரிவாக பேசியதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின் போது வடகொரியா, ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா ஆகியவை பொதுவான அக்கறை கொண்டு இணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபரிடம் ஒபாமா வலியுறுத்தினார். இதே போல தென்கொரியா ஜனாதிபதி லீ மியாங் பாக்கும், சீன அதிபரை சந்தித்து, வடகொரியா ராக்கெட்டு ஏவும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
வடகொரியா, சீனாவின் நட்பு நாடாகும். எனவே ஒபாமா நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'வடகொரியா விவகாரத்தில் சீனா கண்ணை மூடிக் கொண்டு இருக்க கூடாது. பொருளாதார உதவிகளை குறைக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில் கொரியா பகுதியில் நிலவும் பதட்டம் தொடர்பாக சீன அதிபர் ஹூ ஜின்டாவோ கருத்து தெரிவிக்கையில், இங்குள்ள சூழ்நிலை மிகவும் னட்பமான, சிக்கல் கொண்டதாக இருக்கிறது. இதற்கு உடனடி தீர்வு காண முடியாவிட்டாலும், அனைத்து தலைவர்களும் பேசி மேலும் அதிகரிப்பதை தவிர்க்கலாம்' என கேட்டுக் கொண்டார்.
முன்னதாக சியோலில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் ஒபாமா கலந்து கொண்டார். அங்கு பேசுகையில் அவர் வடகொரியா, ஈரான் நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நாடுகள் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டால் அவை மற்ற உலக நாடுகளில் இருந்து தனித்து விடப்படும் என்று குறிப்பிட்டார்.
மேலும் அணு ஆயுத தயாரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக ரஷ்ய பிரதமர் புதினை வருகிற மே மாதம் சந்தித்து பேச்சு நடத்த இருப்பதாக ஒபாமா தெரிவித்தார்.
இதற்கிடையில் ஈரானில் உள்ள தாஜிஸ்தான் நகரில் 'ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம்' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் ஜனாதிபதி முகமத் அகாமதின் நிஜாத் கலந்து கொண்டு பேசுகையில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார். 'அமெரிக்காவும், நேட்டோவும் தங்களது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இவர்களின் ஆதிக்க சர்வாதிகாரப் போக்கு இனி நீடிக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

திபெத் ஆக்கிரமிப்பு: சீன அதிபர் வருகையை கண்டித்தும் டெல்லியில் ஒருவர் தீக்குளிப்பு



Tibetan 'critical' after immolation bid in Delhi - India News Headlines in Tamil
திபெத் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்தும், 'பிரிக்ஸ்' நாடுகளின் மாநாட்டிற்காக இன்று இந்தியா வர உள்ள, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேற்று திபெத்தைச் சேர்ந்த ஒருவர் தீக்குளித்தார். பற்றி எரியும் ஜூவாலையுடன் அவர் அங்குமிங்கும் ஓடிய காட்சி காண்போரைப் பதற வைத்தது.
திபெத் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்தும், தலாய் லாமா தனது சொந்த பூமிக்குத் திரும்பக் கோரியும், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இதுவரை 30 பேர் தீக்குளித்துள்ளனர். இத்தீக்குளிப்பு சம்பவங்கள் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பான 'பிரிக்ஸ்' அமைப்பின் கூட்டம் டில்லியில் நடக்க உள்ளது. இன்று சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ வர உள்ளார். அவரது வருகையை எதிர்த்தும், திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை கண்டித்தும், நேற்று பார்லிமென்ட் அருகில் உள்ள சென்ட்ரல் பிளாசா பகுதியில், 600 திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, ஜம்பா யெயி(27), திடீரென தன் மீது தீயைப் பற்ற வைத்துக் கொண்டார். விறுவிறுவென அவர் மீது பற்றிய தீப் பிழம்புகளுடன் அவர் அங்குமிங்கும் ஓடினார். இரு நிமிடங்கள் இவ்வாறு அவர் பரிதவித்த பின், அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் மீது திபெத் கொடியை போர்த்தியும், தண்ணீரை ஊற்றியும், நெருப்பை அணைத்தனர்.
எனினும் அவர் உடலில் 85 சதவீதம் நெருப்பால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவிடாமல் தடுத்தனர். எனினும், பின்னர் போலீசார் அவர்களை விலக்கி, யெயியை சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர். யெயி தற்போது மிகவும் அபாயமான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர், 2006ல் திபெத்தில் இருந்து தப்பியோடி வந்து, டில்லியில் வசித்து வருகிறார். இத்தகைய தீக்குளிப்பு டில்லியில் இது இரண்டாவது முறையாகும். கடந்தாண்டில் டில்லியில் உள்ள சீனத் தூதரகத்தின் முன் ஒருவர் தீக்குளித்தார். எனினும் சிறு காயங்களுடன் அவர் பிழைத்து விட்டார்.

Loading