அமெரிக்காவில் புயல் ; 27 பேர் பலி!! (படங்கள் இணைப்பு)
அமெரிக்காவில் இன்டியானா, கென்டகி மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் இன்று வீசிய கடும் புயல் மற்றும் டோர்னடோ எனும் சுழற்காற்றின் காரணமாக குறைந்தபட்சம் 27 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்டியானா மாநிலத்தின் 3 கவுன்ரிகளுக்கு பரவிய புயலின் காரணமாக 13 பேர் பலியானதாகவும் கென்டகி மாநிலத்தில் 12 பேரும் ஒஹையோவில் இருவரும் பலியானதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இயற்கையின் அகோரத்திற்கு நாம் ஈடுகொடுக்கக் கூடியவர்கள் அல்லர் என இன்டியானா மாநிலத்தின் ஆளுநர் மிச் டேனியல் தெரிவித்துள்ளார். அவர் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.


