"தீபன் பக்கங்கள்"

சாக்லேட் பிரியர்களுக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தி!

தினசரி சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகி உள்ளது. 
அதாவது அதிக அளவில் சாக்லேட் திண்பவர்களுக்கு குடல் புற்று நோயின் தாக்குதல் குறையும் என ஸ்பெயின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சாக்லேட்டுகளில் கோகோ கலக்கப்படுகிறது. அதில், ஆன்டி ஆக்சிடென்டஸ் என்றழைக்கப்படும் உயிர் எதிர்ப்பு சக்தி உள்ளது.
இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறு களை அழிக்கக்கூடிய தன்மை படைத்தவை. எனவே, சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்றுநோய் தாக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் குடல் புற்றுநோய்க்கு ஆண்டு தோறும் 6 லட்சத்து 55 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

Loading