ஆப்கானிஸ்தானில் கண்டகார் பகுதியில் அமெரிக்க ராணுவ வீரரான ராபர்ட் பாலிஸ்(38) கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 அப்பாவிகள் இறந்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட பாலிஸ், அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு ராணுவ முகாமில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறார். அவர் மீது 17 கொலை வழக்குகள் தொடரப்படும் என அமெரிக்க அதிகாரிகள் நேற்று அறிவித்தனர்.
இந்தநிலையில் அமெரிக்கா நடத்தும் இந்த விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என தலீபான் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதன் செய்தி தொடர்பாளர் சபிதுல்லா முஜாகித் கூறுகையில், 'அமெரிக்கா திட்டமிட்டு செயல்படும் இந்த விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. சம்பந்தப்பட்ட கொடூர செயலுக்கு பழிதீர்ப்போம். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவது உறுதி' என்று தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக