"தீபன் பக்கங்கள்"

அண்டார்டிகா கடல் நீர் வற்றிக் கொண்டிருக்கும் மர்மம்



Coldest, deepest Antarctic water 'mysteriously shrinking' - World News Headlines in Tamil
அண்டார்டிகாவின் ஆழ் கடல் நீர் மர்மமான முறையில் வற்றி வருகிறது. உலகில் உள்ள ஆழ்கடல்களில் இருந்து வெப்பத்தின் மூலம் வெளியேறும் தண்ணீர் பூமியின் மேற்பரப்பை சென்றடைந்து மேகமாக மாறி மழையாக பொழிகிறது. இதன் மூலம் பூமியின் பருவ நிலை மாற்றம் சமநிலை படுத்தப்படுகிறது.

ஆனால், பனிக்கட்டிகளால் ஆன அண்டார்டிகா கடலின் தென் பகுதியில் உள்ள ஆழ்கடல் நீர் வற்றி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் வினாடிக்கு 8 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வற்றி மாயமானதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றின் தண்ணீரை விட 50 மடங்குகளாகும். இந்த கடல் நீர் வற்றுவதற்கான காரணம் மர்மமாக உள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

உலகிலேயே மிகவும் குளிர்ந்த நீரைக் கொண்டுள்ள கடல் அண்டார்டிக்கா கடல் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடலின் நீர் வற்றிப் போவதற்கு அதிகரிக்கும் புவி வெப்பமும், ஓசோனில் விழுந்த ஓட்டையும்தான் காரணம் என புவி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:

கருத்துரையிடுக

Loading